கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
இந்திய வம்சா வழியைச் சேர்ந்த சன்னி லியோன், கனடாவில் பிறந்து வளர்ந்தவர். போர்னோகிராபி எனப்படும் ஆபாச படங்களில் நடித்து புகழ்பெற்றவர். ஹிந்தி பிக்பாஸ் மூலம் இந்தியாவுக்கு வந்தவர், பின்னர் பாலிவுட் நடிகை ஆனார். வடகறி என்ற தமிழ் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடிய சன்னி லியோன் தற்போது வீரமாதேவி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் சன்னி லியோனின் பல சாதனைகளை பாராட்டும் விதமாக டில்லியில் உள்ள மேடம் டுசாட் என்ற மெழுகு சிலை மியூசியத்தில் சன்னி லியோனுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இதே மியூசியத்தில் தான் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், ஸ்ரீதேவி உள்பல பல பாலிவுட் நடிகர், நடிகைகளுக்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மியூசியத்துக்கு சென்று தனது சிலையை பார்வையிட்டார் சன்னி லியோன். பின்னர் அதன் அருகில் நின்று விதவிதமாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது குறித்து அவர் கூறியதாவது : எனது பூர்வீக மண்ணில் எனக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய கவுரவம் இது. இதை உருவாக்கிய தொழில்நுட்ப கலைஞர்களை பாராட்டுகிறேன். மிகவும் நேர்த்தியாக இதனை உருவாக்கி இருக்கிறார்கள். மகிழ்ச்சியான உணர்வை இந்த சிலை எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது. என்கிறார் சன்னி லியோன்.