பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் பாலிவுட் கவர்ச்சி நடிகையான சன்னி லியோன். அதனால் இவர் படப்பிடிப்பிற்காக செல்லும் இடங்களுக்கு தானே சொந்தமாக பாதுகாவலர்களை அழைத்து செல்கிறார். அப்படி சமீபத்தில் ஆமதாபாத்தில் ஒரு படப்பிடிப்பில் கலந்துகொண்டு மும்பை திரும்புவதற்காக ஆமதாபாத் விமான நிலையம் வந்த சன்னி லியோனுக்கும், விமான நிலைய அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதாவது விமான நிலையத்தில் க்யூவில் நின்று ரசிகர்களின் தொல்லைக்கு ஆளாகாமல் இருப்பதற்காக தன்னையும் தனது பாதுகாவலர்களையும் உள்ளே அனுமதிக்குமாறு சன்னி லியோன் கேட்டுள்ளார். ஆனால், அவரையும் அவரது உடைமைகளையும் மட்டுமே அனுமதித்த அதிகாரிகள், அவரது பாதுகாவலர்களை அப்படி அனுமதிக்க மறுத்து வரிசையில் வரச்சொல்லி விட்டனர்.
இதனால் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் சன்னி லியோன். இதையடுத்து அவருடன் ஒரே ஒரு பாதுகாவலரை மட்டும் செல்ல அனுமதித்தனர். இதுகுறித்து டுவிட்டரில் பகிர்ந்துள்ள சன்னி லியோன், "விமான நிலைய அதிகாரிங்கள் எனக்கு உதவுவார்கள் என நினைத்தது என் தவறு தான்" என நொந்துபோய் கூறியுள்ளார்.