ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தனது அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும், நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்கள், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு 360 விவசாயிகளின் குடும்பங்களுக்கு 3 கோடியே லட்சம் ரூபாயும், 44 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு 2 கோடியே 20 லட்சம் ரூபாயும் வழங்கினார். ராணுவ வீரர்கள், விவசாயிகளின் குடும்பத்தை தனது வீட்டுக்கே வரவழைத்து இந்த நிதியை அவர் மனைவி ஜெயா பச்சன் மூலம் வழங்கினார். இதுகுறித்து அமிதாப்பச்சன் கூறியிருப்பதாவது:
ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை நாட்டுக்காக தியாகம் செய்திருக்கிறார்கள். மனைவிகளை, பெற்றோரை, குழந்தைகளை இன்னும் சிலர் பிறக்கப்போகும் குழந்தைகளையும் பிரிந்து சென்றிருக்கிறார்கள். நம்மையும் நமது நாட்டையும் பாதுகாக்க அவர்கள் போராடியுள்ளனர். அவர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர்.
இந்த குடும்பத்தினரின் வலிகளையும் வேதனைகளையும் என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இவர்களுக்கு உதவ இன்னும் பலர் முன் வரவேண்டும். இன்னும் பலர் உதவ வேண்டும் என்பதற்காக இதை நான் வெளிப்படையாக செய்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.