இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
இப்போதெல்லாம் சமூக நலன் சார்ந்த விஷயங்களில் அதிக அக்கறை காட்டி வருகிறார் கரீனா கபூர். குறிப்பாக, பெண்கள் உரிமை, பெண்களுக்கு எதிரான வன்முறை ஆகியவற்றை எதிர்த்து, ஆவேசமாக குரல் கொடுக்க துவங்கியுள்ளார்.
சமீபத்தில், மும்பையில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற அவர், 'பெண்கள், தங்களுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ வேண்டும். யாருக்காகவும், எதற்காகவும், தங்கள் கொள்கையை விட்டுக் கொடுக்க கூடாது. முக்கியமாக, பெண்கள், எதற்கும் பயப்படக் கூடாது' என, பேசினார்.'நானும், முன்பெல்லாம் எதற்கெடுத்தாலும் பயப்படும் பெண் தான். ஆனால், திருமணத்துக்கு பின், ரொம்பவே மாறி விட்டேன்.
என்னை, மிகப்பெரிய பிரபலமாகவோ, ஒரு தேவதையாகவோ, எப்போதுமே நினைத்தது இல்லை. சாதாரண பெண்ணாகவே நினைக்கிறேன். சாதாரண பெண்ணாகவே வாழ்கிறேன்' என்றும், அவர் பேசினார்.
'கரீனா கபூருக்கு, 37 வயதாகி விட்டது. அதனால், படிப்படியாக சினிமாவில் இருந்து விலகி, சமூக நலன் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் காட்ட முடிவு செய்துள்ளார். இதன் வெளிப்பாடு தான், கரீனாவின் சமீபத்திய செயல்பாடுகள்' என்கின்றன, பாலிவுட் வட்டாரங்கள்.