இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் முரளிதரன். இவர் மும்பையில் தயாராகும் ஒரு வாசனை திரவியத்தின் சென்னை முகவராக இருந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 6 லட்சத்து 50 ஆயிரத்துக்கு அந்த வாசனை திரவியத்தை வாங்கி விற்பனை செய்துள்ளார். சரியாக விற்பனை ஆகாததால் 3 லட்சம் மதிப்புள்ள வாசனை திரவியத்தை அந்த நிறுவனத்துக்கே திருப்பி அனுப்பி உள்ளார்.
அதற்குரிய பணத்தை அந்த நிறுவனம் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் முரளிதரன் சென்னை உயர்நீதி மன்றத்தில் அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கொடுங்கையூர் போலீசுக்கு உத்தவிட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் கொடுங்கையூர் போலீசார் மும்பை நிறுவனத்தைச் சேர்ந்த சஞ்சீவி நாயர், அபினன்மோடி, சோமஸ் சவுத்ரி, பிசார் கைடி, ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தது.
போலீசார் வழக்கில் சேர்த்துள்ள ஹிருத்திக் ரோஷன் பிரபல பாலிவுட் நடிகர் என்பதும், அந்த வாசனைத் திரவிய விளம்பரத்தில் அவர் நடித்துள்ளார் என்பதும் இப்போதுதான் போலீசுக்கே தெரிய வந்துள்ளது.