தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தோனியின் வாழ்க்கை படத்தில் நடித்து பிரபலமானவர் ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். தற்போது டிரைவ், கேதர்நாத் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். கேரளாவை புரட்டிப்போட்ட பேய் மழையால் அந்த மாநிலம் நிலைகுலைந்து போய் உள்ளது.
கேரளா பாதிப்பு குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டிருந்த சுஷாந்த், அனைவரும் முடிந்த அளவு கேரளாவுக்கு உதவுங்கள் என வேண்டுகோள் வைத்தார். சுபம்ரஞ்சன் என்பவர், என்னிடம் பணம் இல்லை, உணவு அளிக்கிறேன், எப்படி கொடுப்பது என கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த சுஷாந்த், கவலைப்படாதீர்கள், உங்கள் பெயரில் நான் ஒரு கோடி அளிப்பேன், என கூறி கேரள முதல்வரின் வெள்ள நிவாரணத்திற்கு ஒரு கோடி நிதி உதவி அளித்து, அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டதோடு, என்னை இந்த உதவியை செய்ய தூண்டிய சுபம்ரஞ்சனுக்கு நன்றி என பதிவிட்டிருக்கிறார்.