ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
அமிதாப் பச்சனும் அவ்வப்போது சர்ச்சையில சிக்குவார். சமீபத்தில் தனது மகள் சுவேதாவுடன் ஒரு நகைக் கடை விளம்பரப் படத்தில் நடித்தார். இதுவரை வெளி உலகத்துக்கு அதிகம் வராத, திரையில் தோன்றாத சுவேதா நடித்திருப்பதால் விளம்பரப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து. கூடவே இப்போது எதிர்ப்பும் வந்திருக்கிறது. முதலில் அந்த விளம்பரத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று பார்க்கலாம்...
அமிதாப்பச்சன் மகளுடன் வங்கி ஒன்றுக்கு சென்று தன் பாஸ்புக்கை கொடுத்து பென்ஷன் தொடர்பாக பேச முற்படுகிறார். அதற்கு மகள் உதவி செய்கிறார். உடனே வங்கி ஊழியர் எரிச்சல்பட்டு பாஸ்புக்கை தள்ளிவிடுகிறார். பிறகு ஒவ்வொரு கவுண்ட்டராக சென்றும் அவருக்கு திரும்ப திரும்ப அதே அனுபவம் ஏற்படுகிறது. இறுதியாக மகளுடன் வங்கி மேலாளரை சந்திக்கிறார் அமிதாப்பச்சன்.
தனக்கு ஒரு மாதத்தில் இரண்டு முறை பென்ஷன் 'கிரடிட்' ஆகிவிட்டது என்று கூறுகிறார். அதை கேட்டதும் மேலாளர் இதற்கு நீங்கள் விருந்துதான் வைக்க வேண்டும் என்கிறார். ஆனால் இப்படி ஏமாற்றி பணம் சேர்ப்பது எனது கொள்கைக்கு விரோதமானது என்கிறார் அமிதாப்பச்சன். அதை கேட்டதும் அதிர்ச்சியாகிறார் மேலாளர். உடனே கையெழுத்திட்டு அவரது கோரிக்கையை நிறைவேற்றுகிறார்.
இப்படி ஒன்றரை நிமிடம் அந்த விளம்பரம் ஓடுகிறது. இந்த விளம்பரத்துக்கும் நகை கடைக்கும் என்ன சம்பந்தம் என்றால் அமிதாப்பச்சன் போன்றே நேர்மையானதாம் அந்த நகைக் கடை.