'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
போர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டு தோறும் உலகில் அதிகம் சம்பாதிக்கும் 100 பேர் பட்டியலை வெளியிடும். அந்த வரிசையில் 2018-ம் ஆண்டுக்கான பட்டியலை நேற்று வெளியிட்டது. 100 பேர் பட்டியலில் பாலிவுட் நடிகர்கள் அக்ஷ்ய் குமாரும், சல்மான்கானும் இடம்பிடித்துள்ளனர்.
அக்ஷ்ய் குமார் இந்த பட்டியலில் 76வது இடத்தில் இருக்கிறார். அவரது ஆண்டு வருமானம் 4.05 கோடி டாலராகும். "அக்ஷய்குமார் சமூக அக்கறை கொண்ட நடிகர். அத்தகைய படங்களை தேர்வு செய்து நடிக்கிறார். அரசின் தூய்மை பிரச்சாரத்துக்கு உதவும் டாய்லெட் படத்தில் நடித்துள்ளார். 20க்கும் மேற்பட்ட விளம்பர படங்கள் மூலம் அதிக வருவாய் ஈட்டி உள்ளார்" என்று போர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது.
சல்மான்கானுக்கு 82வது இடம் கிடைத்துள்ளது. அவரது ஆண்டு வருமானம் 3.77 கோடி டாலர். சல்மான் நடித்த டைகர் ஜிந்தா ஹே படம் அதிக வசூலை கொடுத்தது. சதவிகித அடிப்படையில் இதில் சல்மான் அதிக வருவாய் ஈட்டினார். விளம்பரங்களுக்கு அதிக சம்பளம் பெறுகிறார். பாலிவுட்டில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்" என்று போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலில் தொழில் முறை குத்துச் சண்டை வீரர் பிளாய்டு மேவெதர், ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளூனி, நடிகை கைல் ஜென்னர், ஜூடி ஷெய்ண்டின், டுவைன் ஜான்சன் ஆகியோர் முதல் 5 இடத்தை பிடித்துள்ளனர்.