இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாலிவுட் நடிகர் சல்மானின் சகோதரரும், நடிகரும், மற்றும் தயாரிப்பாளரான அர்பாஸ் கான் போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சம்மன்
ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கடந்த மே 15ம் தேதி மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவல் அடிப்படையில், பாலிவுட் நடிகர் சல்மான் கானின் சகோதரரும், நடிகரும், தயாரிப்பாளருமான அர்பாஸ் கானுக்கு போலீசார் நேற்று சம்மன் அனுப்பியிருந்தனர்.
வாக்குமூலம்
இதன் அடிப்படையில் தானே போலீசார் முன் அவர் ஆஜரானார். அப்போது, கடந்த ஐ.பி.எல்., போட்டிகளின் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், இந்த ஆண்டு நடந்த தொடரிலும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒப்பு கொண்டதாகவும் தெரிகிறது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
மிரட்டல்
அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு, சூதாட்டத்தில் அர்பாஸ் கான் ரூ.2.80 கோடி தோற்று விட்டார். ஆனால், அவர் புக்கிகளுக்கு பணத்தை கொடுக்கவில்லை. இதனால், கோபமடைந்த அவர்கள் அர்பாஸ்கானுக்கு மிரட்டல் விடுத்ததாக போலீசார் கூறியுள்ளனர்.