இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை |
வெள்ளாவி தேவதை டாப்சி, இப்போது தமிழில் அதிகமாக நடிப்பது இல்லை. ஆனால், பாலிவுட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். பிங்க் போன்ற படங்கள், அவருக்கு, பாலிவுட்டில், விருதுகளையும், பாராட்டையும் குவித்ததால், தொடர்ந்து அங்கேயே கவனம் செலுத்தி வருகிறார்.
'தீபிகா, பிரியங்கா போன்றோர், ஹாலிவுட் படங்களில் நடிக்கின்றனர்; உங்களுக்கு வாய்ப்பு வரவில்லையா' என, அவரிடம் கேட்டபோது, பொங்கித் தீர்த்து விட்டார். 'எனக்கு தேவையான படங்கள், பாலிவுட்டிலேயே கிடைக்கின்றன. எல்லாமே எனக்கு திருப்தி அளிக்கும் கேரக்டர்கள் தான். அதனால், ஹாலிவுட்டுக்கு சென்று, ஒவ்வொருவரிடமும் வாய்ப்பு தாருங்கள் என, கெஞ்ச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை' என்றார்.
டாப்சியின் இந்த பேச்சு, ஏற்கனவே ஹாலிவுட் படங்களில் நடித்து வரும், பிரியங்கா, தீபிகா போன்ற நடிகையரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 'நாங்கள், ஹாலிவுட்டில் வாய்ப்புக்கு அலைகிறோமா...' என, ஆவேசப்படுகின்றனர், அவர்கள்.