கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
இந்தியில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டி ருப்பவர் ஆலியாபட். பிரபல பாலிவுட் பட இயக்குனர் மகேஷ்பட்டின் மகளான இவரும் தற்போது நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பிரச்சினை குறித்து ஒரு ஆவேச கருத்தினை வெளியிட்டுள்ளார்.
அதுகுறித்து ஆலியாபட் கூறும்போது, சினிமாவில் படவாய்ப்புகளுக்காக நடிகைகள் போராடுகிறார்கள். அதை பயன்படுத்தி சில பிரபலங்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இதற்கு இப்போதே ஒரு முடிவுகட்ட வேண்டும்.
அதாவது, யாராவது சினிமா பிரபலங்கள் நடிகைகளை படுக்கைக்கு அழைத்தால் அதுகுறித்து உடனே தங்களது பெற்றோரிடம் சொல்ல வேண்டும். பின்னர் போலீசில் புகார் அளிக்க வேண்டும். இப்படி பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நடிகைகளும் தைரியமாக அதை எதிர்கொள்ளும் போதுதான் சினிமா உலகில் தொடர்கதையாகி வரும் பாலியல் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று கூறியுள்ளார் ஆலியாபட்.
வாரிசு நடிகையான ஆலியாபட்டின் இந்த கருத்து பாலிவுட்டில் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.