டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்தியில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டி ருப்பவர் ஆலியாபட். பிரபல பாலிவுட் பட இயக்குனர் மகேஷ்பட்டின் மகளான இவரும் தற்போது நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பிரச்சினை குறித்து ஒரு ஆவேச கருத்தினை வெளியிட்டுள்ளார்.
அதுகுறித்து ஆலியாபட் கூறும்போது, சினிமாவில் படவாய்ப்புகளுக்காக நடிகைகள் போராடுகிறார்கள். அதை பயன்படுத்தி சில பிரபலங்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இதற்கு இப்போதே ஒரு முடிவுகட்ட வேண்டும்.
அதாவது, யாராவது சினிமா பிரபலங்கள் நடிகைகளை படுக்கைக்கு அழைத்தால் அதுகுறித்து உடனே தங்களது பெற்றோரிடம் சொல்ல வேண்டும். பின்னர் போலீசில் புகார் அளிக்க வேண்டும். இப்படி பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நடிகைகளும் தைரியமாக அதை எதிர்கொள்ளும் போதுதான் சினிமா உலகில் தொடர்கதையாகி வரும் பாலியல் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று கூறியுள்ளார் ஆலியாபட்.
வாரிசு நடிகையான ஆலியாபட்டின் இந்த கருத்து பாலிவுட்டில் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.