தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மோகன்லாலின் மகன் பிரணவ் கதாநாயகனாக அறிமுகமான ஆதி படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து இந்தப்படத்தின் நூறாவது நாள் விழாவும் சமீபத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்தநிலையில் அந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளரான ஆண்டனி பெரும்பாவூர் மோகன்லாலின் காலடியில் தரையில் அமர்ந்தபடி அந்த விழாவை ரசிக்கும் போட்டோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது..
என்னதான் இருந்தாலும் ஒரு தயாரிப்பாளரை தரையில் அமரச் செய்யலாமா என்கிற விமர்சனங்களும் மோகன்லால் மீது வீசப்பட்டு வருகின்றன. ஆனால் ஆண்டனி பெரும்பாவூரை பொறுத்தவரை அவர் மோகன்லாலின் தீவிர பக்தர் என்று சொல்லலாம். மோகன்லால் ஆரம்பித்துக் கொடுத்த ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளராக இன்று வரை செம்மையாக நடத்திவரும் இவர், மோகன்லாலின் சுக துக்கங்களில் எப்போதும் உடன் நிற்பவர்.
அதனாலேயே இந்த நூறாவது நாள் விழாவையும் அவர் தயாரிப்பாளர் என்பதை மறந்து, தனது குடும்ப விழாவாக நினைத்து தரையில் அமர்ந்து ரசித்தார்.. இதிலென்ன தவறு என விளக்கம் அளித்துள்ளது ஆண்டனியின் தரப்பு.