டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினால் சினிமாவில் தங்களுக்கான இமேஜ் சரிந்துவிடும் என முன்னணி நடிகர்கள் பயந்த காலமும் உண்டு.. ஆனால் இன்று சின்னத்திரையின் வீச்சு அதிகமென்பதால் மக்கள் மனதில் இடம்பிடிக்க கூடிய நிகழ்ச்சிகள் மூலம் சின்னத்திரைக்குள் நுழைவதால் இமேஜ் இன்னும் உயரவே செய்யும் என்பதை புரிந்துகொண்டார்கள் சில நடிகர்கள்..
ஆமீர் கான், சல்மான் கான், சூர்யா, சரத்குமார், சுரேஷ்கோபி ஆகியோர்கள் ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக சின்னத்திரைக்குள் வந்தது இப்படித்தான்.. கடந்த வருடம் நடிகர் கமலும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலமாக இன்னும் கொஞ்சம் பொதுவான ரசிகர்களை தன் வசம் இழுத்துக்கொண்டார் .தொடர்ந்து பிக் பாஸ்-2வையும் நடத்த தயாராகிவிட்டார்.
இந்தநிலையில் மலையாளத்தில் ஆசியாநெட் சேனல் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இந்த நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை மோகன்லால் ஏற்றுள்ளார். இதற்கான அதிரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் விதமாக இந்த நிகழ்ச்சிக்கான துவக்கவிழா நேற்று நடைபெற்றது. மோகன்லால் அவ்வப்போது சின்னத்திரையில் சில சமூக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருந்தாலும், இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான் அவர் நடத்த இருக்கும் மிகப்பெரிய நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.