பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தனக்கு இப்போதெல்லாம் பாலிவுட்டில் இருந்து வாய்ப்புகள் வருவதில்லை என்று கூறியிருந்தார். குறிப்பாக பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலைவழக்கில் விசாரணை குறித்து மோடியையும் அவ்வப்போது பிஜேபியையும் விமர்சித்து பேசியதால் வாய்ப்பு தருவதை நிறுத்திக்கொண்டார்கள் என்றும் கூறியிருந்தார்,
மேலும் இன்னொரு பேட்டியில் ஒவ்வொரு நடிகனுக்கும் சமூக பொறுப்புணர்வு இருக்கிறது. அமிதாப் குரல் எவ்வளவு ரீச் ஆகியிருக்கும்.. ஆனால் அவர் கதுவா விவாகரத்தில் குரல் கொடுக்காமல் அமைதியாக இருந்தது அவரது கோழைத்தனத்தையே காட்டுகிறது. மக்களுக்கு நன்கு அறிமுகமான நம்மைப்போன்றவர்கள் கோழைத்தனமாக இருக்கும்போது, இந்த சமுதாயத்தையும் கோழையாக மாற்றுகிறோம் என்பதை உணரவேண்டும்” என அமிதாப் குறித்து விமர்சித்துள்ளார்.