தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சோஷியல் மீடியாவில் நாள் தவறாமல் தனது கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன். அரசியல் சமூக நிகழ்வுகள் குறித்த கருத்துக்களும், தனது படங்கள் குறித்த புரமோஷன் செய்திகளும் அதில் அடங்கும். அப்படிப்பட்டவர் தற்போது டுவிட்டர் நிர்வாகத்தை கிண்டலடிக்கும் பாணியில் கண்டித்துள்ளார்.
காரணம் இதுதான்... தற்போது டுவிட்டரில் 34.3 மில்லியன் பேர் அமிதாப்பை பின் தொடர்கிறார்கள். ஆனால் இதற்கு முன் ஒருமுறை 33 மில்லியானாக இருந்த இந்த எண்ணிக்கை சடாரென 32.9 மில்லியனாக குறைந்தது.. தான் ஆக்டிவாக இருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கை கூடவில்லை என்றாலும் கூட, இப்படி குறைந்தது கண்டு கோபப்பட்ட அமிதாப் பச்சன், தான் டுவிட்டரை விட்டு வெளியேறப்போவதாக எச்சரித்தார்.. அதன்பின் தான் எண்ணிக்கை அதிமாகி தற்போது 34.3 மில்லியன் பேராக மாறியிருக்கிறது..
இருந்தாலும் நீண்ட நாட்களாக அதே எண்ணிக்கையையே காட்டி வருவதை கவனித்த அமிதாப், “டுவிட்டர் நிர்வாகத்தின் செயல்பாடு ஆச்சர்யம் அளிக்கிறது.. எப்படி ஒவ்வொரு பந்திலும் ஒரு சிக்சர் அடித்தாலும் கூட ஸ்கோர் போர்டை மாற்றாமல் இருப்பது போல, இவ்வளவு ஆக்டிவாக நான் செயல்பட்டாலும் கூட, டுவிட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையும் மாறாமலேயே இருப்பது ஆச்சர்யம் தான்” என கிண்டலடித்துள்ளார்..