ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! |
2017-ம் ஆண்டிற்கான 65வது தேசிய விருது வழங்கும் விழா நேற்று சர்ச்சையுடன் நடந்து முடிந்தது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி முதல் முறையாக தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார். நேற்றைய விழாவில் அவருடைய கணவர் போனி கபூர், மகள்கள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் கலந்து கொண்டனர். விருதை மூவருமே குடியரசுத் தலைவர் கையால் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் அவருடைய அம்மாவின் நினைவாக அம்மாவின் சேலையை அணிந்து கலந்து கொண்டார். அந்த சேலையை நடிகர் ராம்சரணின் திருமணத்தன்று நடிகை ஸ்ரீதேவி அணிந்து வந்திருக்கிறார்.
ஜான்வி அணிந்தது அவருடைய அம்மா சேலை என்ற தகவலை ஸ்ரீதேவியின் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றிய மனிஷ் மல்கோத்ரா தெரிவித்துள்ளார். அந்த சேலை ஸ்ரீதேவியின் தனிப்பட்ட கலெக்ஷனில் இருந்தது என்றும் கூறியிருக்கிறார்.