வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
இங்கிலாந்து இளவரசர் ஹரி மாடல் அழகி மெர்க்கரை தீவிரமாக காதலித்து வந்தார். தற்போது இவர்கள் திருமணம் நடக்க இருக்கிறது. வருகிற மே 19ந் தேதி நடக்கும் திருமணத்தில் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொள்கிறார். உலகம் முழுவதிலிமிருந்தும் அழைக்கப்பட்ட 600 விருந்தினர்களில் பிரியங்கா சோப்ராவும் ஒருவர். காரணம் மணப்பெண் மெர்க்கலும், பிரியங்கா சோப்ராவும் நெருங்கிய தோழிகள்.
இதற்கிடையில் பிரியங்கா சோப்ரா மணப்பெண்ணின் தோழியா இருப்பார் என்ற செய்திகள் நேற்று வெளிவந்தது. இதனை பிரியங்கா சோப்ரா மறுத்துள்ளார். "மெர்கல் எனக்கு நெருக்கமான தோழி, அவர் திருமண பந்தத்தில் இணைய போவது மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணத்திற்கு பிறகு அவரது வாழ்க்கை முற்றிலும் மாற இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள். மணப்பெண் தோழியாக நான் இருப்பேன் என்ற தகவல் தவறானது. ஒரு தோழியாக திருமணத்தில் கலந்து கொள்கிறேன்" என்கிறார் பிரியங்கா சோப்ரா.