'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
ஒரு படத்தின் சில காட்சிகளில் தவறு நடந்துவிட்டால் அதை மீண்டும் படமாக்குவதற்கு மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். அப்படியிருக்க ஒரு படத்தையே சரியில்லை, மொத்தமாக மீண்டும் எடுங்கள் என்று சொன்னால் எப்படியிருக்கும். அப்படி ஒரு சம்பவம் தமன்னா நடித்துள்ள ஹிந்தி படத்திற்கு நடந்திருக்கிறது.
இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தயாரிப்பில் சக்ரி டோலெட்டி இயக்கத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கும் படம் 'கொலையுதிர் காலம்'. இப்படத்தை ஹிந்தியில் தமன்னா நாயகியாக நடிக்க உருவாக்கினார்கள். இரண்டு படங்களையும் யுவனுடன் சேர்ந்து தயாரிக்கும் ஹிந்தித் தயாரிப்பாளரான வஷு பங்கானி, ஹிந்திப் படத்தைப் பார்த்துவிட்டு கொஞ்சம் கூட சரியில்லை, மீண்டும் மொத்தமாக எடுங்கள் என்று சொல்லிவிட்டாராம். தயாரிப்பாளரின் முடிவைக் கேட்டு தமன்னா ஷாக் ஆகிவிட்டாராம்.
ஹிந்தியில் ரீஷுட் எடுக்கச் சொன்னார்கள் சரி, ஆனால், படத்தை தமிழில் எடுத்து முடித்துவிட்டார்களா இல்லை என்பது பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. எடுக்காமலே இருந்திருந்தால் நல்லதுதான் இல்லை என்றால் மீண்டும் ரீஷுட் செய்யச் சொல்லியிருப்பாரே தயாரிப்பாளர் வஷு.