ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ராதிகா ஆப்தே உள்ளிட்ட சில நடிகைகள் திரையுலகில் நடிகைகளுக்கு இருந்து வரும் பாலியல் தொல்லை குறித்து தைரியமாக பேசி வருகின்றனர். அவர்களைத் தொடர்ந்து தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியும் பல பிரபலங்களின் பெயர்களை பட்டியலிட்டார்.
இந்த நிலையில், தக் என்ற இந்தி படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற உஷா ஜாதவ் என்ற ஹிந்தி நடிகையும் திரையுலகில் நடிகைகளுக்கு நிலவி வரும் பாலியல் பிரச்சினை குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், திரையுலகில் தயாரிப்பாளர், டைரக்டர்களிடம் படுக்கையை பகிர்ந்தால் மட்டுமே நடிகைகளுக்கு படவாய்ப்பு கிடைக்கிறது. அப்படி இல்லாதவர்கள் சினிமாவில் நடிப்பதற்கு தகுதியற்றவர்கள் என்று ஓரங்கட்டப்படுகிறார்கள்.
தங்களது சினிமா கேரியர் பாதிக்கும் என்பதால் சில நடிகைகள் இதற்கு உடன்படுகிறார்கள். இந்த பிரச்சினை புதுவரவு நடிகைகள் மட்டுமின்றி முன்னணியில் இருக்கும் நடிகைகளுக்கே உள்ளது என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் உஷா ஜாதவ்.
இந்த உஷா ஜாதவ், ராம்கோபால் வர்மா இயக்கிய சந்தன கடத்தல் வீரப்பன் கதையில் உருவான வீரப்பன் படத்தில், வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி வேடத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.