தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமாவில் நடிகைகளுக்கு நிகழும் பாலியல் தொல்லை குறித்து ஹாலிவுட் தொடங்கி பாலிவுட், டோலிவுட் என பலரும் அம்பலப்படுத்தி வருகின்றனர். பாடகிகளுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாக பாகிஸ்தான் நாட்டு பாடகி மீஷா ஷபி என்பவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தியில்,
பொதுவாக ஒரு துறைக்கு புதிதாக வரும் பெண்கள் தான் பாலியல் தொல்லைக்கு ஆளாவார்கள். ஆனால் நான் பெரிய பாடகியாக பிரபலமான பிறகு அதுவும் இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவான பிறகு எனது சக பாடகரான அலி ஜாபர் என்பவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்.
இது ஒரு முறை அல்ல, பலமுறை நிகழ்ந்திருக்கிறது. இதனால் நானும், எனது குடும்பமும் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகியிருக்கிறோம் என்று கூறும் மீஷா ஷபி, இந்த விசயத்துக்கு இதோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகவே இதை நான் வெளிப்படையாக தெரிவித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
இதுபோன்ற விசயங்களை பெண்கள் வெளிப்படையாக பேச வேண்டும். வாய் மூடி இருக்காமல் துணிந்து பேசும் போது தான் இந்த கலாச்சாரத்துக்கு முடிவுகட்ட முடியும். அப்போதுதான் பாலியல் தொல்லைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்றும் தெரிவித்துள்ளார் மீஷா ஷபி.