ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான். 1998-ம் ஆண்டு படப்பிடிப்புக்காக ஜோத்பூர் சென்றபோது அரிய வகை மானை வேட்டையாடியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
20 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில் ஏப்., 5-ம் தேதி இவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதையடுத்து இரண்டு நாளில் ஜாமினில் வெளியே வந்தார். வெளிநாடு செல்லக்கூடாது உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் சல்மான் வெளியே வந்தார்.
இந்நிலையில் மே 25 முதல் ஜூலை 10 வரை கனடா, நேபாளம், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டியிருப்பதால் அனுமதி கேட்டு ஜோத்பூர் நீதிமன்றத்தில் இன்று(ஏப்.,17) மனு தாக்கல் செய்திருந்தார் சல்மான். இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம், சல்மானை வெளிநாடு செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டது.