தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மாம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
"நியாயப்படி சிறந்த நடிகைக்கான விருது பார்வதி மேனனுக்கு வழங்க வேண்டும். அவருக்கு சிறப்பு விருது வழங்கிவிட்டு ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகை விருது வழங்கியது தவறு" என்ற கருத்து மேலோங்கி வருகிறது.
ஸ்ரீதேவி சிறந்த நடிகைதான் ஆனால் மாம் படத்தில் அவர் பெரிதாக நடிக்கவில்லை. நடிக்க அந்த கதையில் வாய்ப்பும் இல்லை. அவர் இறந்து விட்டார் என்பதற்காக அனுதாபத்தின் அடிப்படையிலேயே ஸ்ரீதேவிக்கு விருது வழங்கப்பட்டிருப்பதாக விமர்சித்து வருகிறார்கள்.
குறிப்பாக விருது கமிட்டித் தலைவர் சேகர் கபூரே "ஸ்ரீதேவிக்கு தேசிய விருது கொடுத்ததில் நியாயம் இல்லை என்று கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:
ஸ்ரீதேவி சிறந்த நடிகைதான். ஆனால் மாம் படத்துக்காக அவருக்கு விருது வழங்கியதை ஏற்கமுடியாது என்று பேச்சு கிளம்பி இருக்கிறது. ஸ்ரீதேவி இறந்து விட்டதால் இந்த விருதை அவருக்கு வழங்குகிறார்கள் என்றும் விமர்சிக்கின்றனர். எனக்கும் ஸ்ரீதேவிக்கும் நல்ல நட்பு உண்டு. ஆனாலும் ஸ்ரீதேவிக்கு விருது வழங்கியதில் எனக்கு உடன்பாடு இல்லை. அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தேர்வு குழுவினரிடம் சுட்டி காட்டி வந்தேன். ஸ்ரீதேவியை தேர்வு செய்வது மற்ற நடிகைகளுக்கு செய்யும் துரோகம் என்று கூறினேன். ஆனாலும் அவரை தேர்வு செய்து விட்டனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.