கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
முன்னாள் உலக அழகியும், நடிகையுமான சுஷ்மிதா சென் வெளிநாட்டு கார் ஒன்றை 55 லட்சத்துக்கு வாங்கினார். இந்த காரை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்த வகையில் வரிஏய்ப்பு செய்ததாக அவர் மீது சுங்க இலாகா துறை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் சுஷ்மிதா தான் பழைய கார் என்று நினைத்தே அதை வாங்கியதாகவும் அதில் வரி ஏய்ப்பு நடந்தது தனக்கு தெரியாது என்றும் கூறினார். காருக்கு வரியாக 20 லட்சம் ரூபாயும் கட்டினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமும் அளித்தார். தான் வரி கட்டிவிட்டதால் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறும் தனக்கு எதிரான பிடிவாரண்ட்டை ரத்து செய்யுமாறும் சுஷ்மிதா சென் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதனை ஏற்று நீதிமன்றம் பிடிவாரண்ட்டுக்கு இடைக்கால தடை விதித்தது. இதனை எதிர்த்து மத்திய புலனாய்வுத்துறை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம். எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவு சரியே என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.