இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகர் சல்மான் கான், 52. ராஜஸ்தான் மாநிலத்தில் 1998ல், இரண்டு அரிய வகை மான்களை சுட்டுக் கொன்ற வழக்கில், ஜோத்பூர் நீதிமன்றம், நேற்று முன்தினம், அவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஜோத்பூர் சிறையில், சல்மான் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், தனக்கு ஜாமின் வழங்கக் கோரி, சல்மான் கான் தாக்கல் செய்த மனு, மாஜிஸ்திரேட், ரவீந்திர குமார் ஜோஷி முன், நேற்று விசாரணைக்கு வந்தது. ஜாமின் மனு மீதான தீர்ப்பை, இன்று வழங்குவதாக, மாஜிஸ்திரேட் அறிவித்தார்.
இரண்டு நாட்கள் சிறை வாசம் அனுபவதித்த சல்மான் கானுக்கு, ஜோத்பூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. ரூ.50 ஆயிரம் பிணைய பத்திரத்துடன் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே நேற்று ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதி பிறப்பி்த்த உத்தரவில் 87 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் சல்மான் வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ரவீந்திர குமார் ஜோஷியும் ஒருவர்.