வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
கே.எஸ்.ரவிக்குமார் ரஜினியை வைத்து இயக்கயிருந்த ராணா படத்தில் நாயகியாக ஒப்பந்தமானவர் தீபிகா படுகோனே. ஆனால் அந்த படம் கைவிடப் பட்டதால் பின்னர் ரஜினி நடித்த கோச்சடையான் அனிமேசன் படத்தில் நாயகியாக நடித்தார்.
மேலும், பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோனே, இந்தி நடிகரும் தனது பாய் பிரண்டுமான ரன்வீர் சிங்கை காதலித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருந்தன.
இந்த நிலையில், அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தற்போது பாலிவுட்டில் செய்தி வெளியாகியுள்ளது. அதோடு, தனது திருமணத்தை தென்னிந்திய முறைப்படி நடத்த ஆசைப்படுகிறாராம் தீபிகா படுகோனே.
அதனால், தற்போது தீபிகா, ரன்வீர் ஆகிய இருவரும் லண்டனில் இருக்கும் நிலையில், தீபிகாவின் அம்மா மற்றும் சகோதரி ஆகியோர் திருமணத்திற்கு தேவையான பொருட்களை பெங்களூரில் ஷாப்பிங் செய்து வருகிறார்களாம்.