'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சஞ்சாய் லீலா பன்சாலி தயாரித்த பிரமாண்ட படம் பத்மாவத். தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இந்த படம் வெளியாவதற்கு முன்பு ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்தது. அதனால் பல மாதங்களாக வெளியாக முடியாமல் தடுமாறி வந்த பத்மாவத் படம் பின்னர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்ததை அடுத்து ஜனவரி 25-ந்தேதி வெளியானது.
ஆனபோதும் இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் இந்த படத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, போன்ற மாநிலங்களில் இப்படம் வெளியாகவில்லை. அதேசமயம், வெளிநாடுகளில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடப்பட்டது.
அந்த வகையில், நேற்று முன்தினம் பத்மாவத் படம் வசூல்ரீதியாக ரூ.300 கோடியை கிராஸ் பண்ணிவிட்டது. 50 நாட்கள் இந்த வசூலை அடைந்துள்ளது.
ஹிந்தியில் இதற்கு முன்னர் பிகே, பஜ்ரங்கி பைஜான், சுல்தான், தங்கல், டைகர் ஜிந்தா ஹே போன்ற நேரடி ஹிந்தி படங்களுடன் பாகுபலி 2(ஹிந்தி டப்பிங்) படமும் ரூ.300 கோடி கிளப்பில் இணைந்துள்ளன.