ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
துபாயில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி, பிப்ரவரி 24 ம் தேதி ஓட்டல் அறையில் திடீரென உயிரிந்தார். மாரடைப்பால் அவர் மரணமடைந்ததால் முதலில் கூறப்பட்டது. ஆனால், குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டது. இருப்பினும் ஸ்ரீதேவி எப்படி உயிரிழந்தார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. பல சந்தேக கேள்விகளையும் எழுப்பி உள்ளது.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் கடைசி நிமிடங்கள் குறித்து அவரது கணவரும், சினிமா தயாரிப்பாளருமான போனி கபூர் மனம் திறந்து பேசி உள்ளார். பிரபல சினிமா விமர்சகர் கோமல் நத்தாவிடம் போனி கபூர் பேசியதை, நத்தா கட்டுரையாக வெளியிட்டுள்ளார்.
அதில் போனி கபூர் கூறியதாவது : மகள் ஜான்விக்காக ஷாப்பிங் செய்வதற்காக திருமண நிகழ்ச்சி முடிந்து பிறகு, 2 நாட்கள் துபாயிலேயே தங்க ஸ்ரீதேவி முடிவு செய்தார். பிப்ரவரி 22 ம் தேதி லக்னோவில் மீட்டிங் ஒன்றில் கலந்து கொள்வதற்காக நான் இந்தியா வந்து விட்டேன். அன்றைய தினம் ஸ்ரீதேவி தனது தோழியுடன் பேசி பொழுதை கழித்து விட்டு, ஓட்டல் அறையில் ஓய்வு எடுத்துள்ளார்.
பிப்ரவரி 24 ம் தேதி காலை நான் ஸ்ரீதேவியுடன் பேசினேன். நான் உங்களை மிகவும் மிஸ் பண்றேன் என்றார். அப்போதும் அன்று மாலை நான் துபாய்க்கு வருவதை அவரிடம் சொல்லவில்லை. கடந்த 24 வருடங்களில் ஸ்ரீதேவி இல்லாமல் 2 முறை மட்டும் தான் தனியாக வெளிநாடு சென்றுள்ளேன். ஒன்று நியூஜெர்சி பயணம், மற்றொரு வான்கோவர் சென்றது.
3.30 மணிக்கு துபாய் செல்லும் விமானத்தில் சென்றேன். துபாய் நேரப்படி மாலை 6.20 க்கு ஓட்டல் அறைக்கு சென்றேன். ஸ்ரீதேவிக்கு சர்ப்பரைஸ் கொடுப்பதற்காக அவரிடம் சொல்லாமல் சென்றேன். என்னிடம் இருந்த டூப்ளிகேட் சாவியை வைத்து கதவை திறந்து ஸ்ரீதேவியின் அறைக்குள் சென்றேன். ஆனால், நான் துபாய் வருவேன் என தெரியும் என ஸ்ரீதேவி என்னிடம் கூறினார்.
என்னை கட்டி அணைத்து, முத்தமிட்ட ஸ்ரீதேவி, அரைமணிநேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். பிறகு ஷாப்பிங் போகலாம், தற்போது இரவு உணவிற்காக செல்லலாம் என கூறினேன். அதற்கு சம்மதம் தெரிவித்து அவரும் குளித்து வருவதாக கூறி பாத்ரூமிற்கு சென்றார். நான் அறையில் டி.வி., பார்த்துக் கொண்டிருந்தேன்.
15 - 20 நிமிடங்களுக்கு மேல் ஆனது. அன்று சனிக்கிழமை என்பதால் இரவு 8 மணிக்கு மேல் ஓட்டலில் கூட்டம் அதிகமாகி விடும் என்ற பதற்றத்தால் ஸ்ரீதேவியை கூப்பிட்டேன். நான் சத்தமாக கூப்பிட்டும் அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. வழக்கத்திற்கு மாறாக இருப்பதால், பாத்ரூம் கதவை தட்டினேன்.
அப்போது தான் பார்த்தேன் கதவு உள்புறம் தாளிடாமல் இருந்தது. பதற்றமும், பயமும் அடைந்த நான் ஓடி சென்று பார்த்த போது, ஸ்ரீதேவியின் உடல் முழுவதும் குளியல் தொட்டிக்குள் மூழ்கி இருந்தது. அசைவற்று அவர் இருந்ததால் எனக்கு பயம் அதிகமானது. அவரை எழுப்ப முயன்றேன். ஆனால் அவர் எழவே இல்லை என்றார்.