இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சிரஞ்சீவி நடிக்கும் 151வது படம் சைரா நரசிம்ம ரெட்டி. சுதந்திர போராட்ட வீரரின் கதையில் சிரஞ்சீவி நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சிரஞ்சீவியுடன் அமிதாப்பச்சன், நயன்தாரா, சுதீப், விஜய் சேதுபதி என பலர் நடிப்பதாகவும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதாகவும் முதலில் கூறப்பட்டது.
பின்னர் ஏ.ஆர்.ரகுமான் அப்படத்தில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக எஸ்.எஸ்.தமன் இசையமைக்கலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது பாகுபலி இசையமைப்பாளர் கீரவாணி, சைரா நரசிம்ம ரெட்டி படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த நிலையில், தற்போது அமிதாப்பச்சன் அப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. ஆனால் இந்த செய்தியை சிரஞ்சீவி தரப்பு உடனடியாக மறுத்துள்ளது. அமிதாப்பச்சன், சிரஞ்சீவியின் குருநாதராக கதைக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சிரஞ்சீவி - அமிதாப்பச்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகமாக படமாக்கப்பட உள்ளது என்று சொல்லி அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.