'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாளத்தில் பிரபலமான இயக்குநர் ஜீத்து ஜோசப். மோகன்லால் நடிப்பில் இவரது இயக்கத்தில் வெளிவந்த த்ரிஷ்யம் படம், தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் ரீ-மேக்காகி வெற்றி பெற்றது. ஜீத்து பாலிவுட்டில் ஒருபடம் இயக்க உள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் தற்போது அது உறுதியாகி உள்ளது.
ஜீத்து ஜோசப் இயக்கும் முதல் பாலிவுட் படத்தில் இம்ரான் ஹாஸ்மியும், ரிஷி கபூரும் முக்கிய ரோலில் நடிக்க உள்ளனர். கிரைம் கலந்த திரில்லர் கதையாக இப்படம் உருவாக உள்ளது. தற்போது திரைக்கதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மற்ற நடிகர்கள் தேர்வும் நடக்கிறது. அனைத்தும் முடிவானதும் படத்தை ஆரம்பிக்க உள்ளனர்.