ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பத்மாவத் படத்தை தொடர்ந்து நடிகை தீபிகா படுகோனே நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. இர்பான் கானுக்கு ஜோடியாக தீபிகா நடிக்கும் இந்த புதிய படத்திற்கு ராணி என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில், ரவுடி கும்பல்களுக்கு சிம்ம சொப்பணமாக விளங்கிய கொள்ளை கூட்ட தலைவி சப்னா தீதீ வேடத்தில் தான் தீபிகா நடிக்க உள்ளாராம். இந்த படத்திற்காக தன்னை தயார்படுத்திக் வேலைகளில் தீபிகா ஏற்கனவே இறங்கி விட்டாராம். இப்படத்தின் சூட்டிங் வேலைகள் வரும் மார்ச் மாதம் மும்பையில் துவங்க உள்ளதாம்.
இப்படத்தில் கொள்ளைக் கூட்ட தலைவனாக இர்பான் கானின் மனைவியாக தீபிகா நடிக்க உள்ளாராம். இப்படத்தை விஷால் பரத்வாஜ் இயக்கி, தயாரிக்கிறார். அவருடன் இணைந்து கிர்அர்ஜ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாம்.