தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள சினிமாவின் சீனியர் நடிகையான கே.பி.ஏ.சி லலிதா, திரையுலகில் தனது பயணத்தை தொடங்கி 5௦ ஆண்டுகள் ஆனதையொட்டி. திரையுலகை சேர்ந்தவர்கள் திருச்சூரில் இதை ஒரு விழாவாக எடுத்து கொண்டாடியுள்ளார்கள்..
இந்த விழாவில் மம்முட்டி, ஜெயராம், மேனகா சுரேஷ், இன்னொசன்ட் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். மோகன்லால் 'காயங்குளம் கொச்சுன்னி' படப்பிடிப்பில் கலந்துகொள்ள சென்றதால் இந்த நிகழ்வில் கலந்துகொள வில்லை.
'காதலுக்கு மரியாதை' படத்தில் ஷாலினியின் அம்மாவாக நடித்தவர் தான் கே.பி.ஏ.சி லலிதா. அதுமட்டுமல்ல தமிழில் நடிகர், திலகம் சிவாஜி, கமல் நடித்த 'தேவர்மகன்' மற்றும் ஆவாரம்பூ படங்களை இயக்கிய மறைந்த மலையாள இயக்குனர் பரதனின் மனைவியுமாவார்.
இவரது மகன் சித்தார்த் பரதன் தற்போது மலையாள திரையுலகில் தந்தை வழியில் இயக்குனராக மாறி படங்களை இயக்கி வருகிறார்..