டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நாகினி எனும் பாம்பு சிரீயல் மூலம் பிரபலமான நடிகை மவுனி ராய், முதன்முறையாக வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். முதல்படமாக அக்ஷ்ய் குமாரின் கோல்டு படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிந்தது. அக்ஷ்ய் உடன் நடித்த அனுபவம் குறித்து மவுனி ராய் கூறுகையில்,
படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் அக்ஷ்ய் குமார் அதிக ஈடுபாட்டோடு நடிப்பார். அதை பார்த்தாலே போதும் நமக்கும் அந்த ஈடுபாடு அதிகரித்து விடும். கோல்டு படப்பிடிப்பின் போது நிறைய விஷயங்களை அக்ஷ்ய் குமாரிடமிடருந்து கற்று கொண்டேன். இந்தப்படம் நல்ல அனுபவமாக இருந்தது. அதற்கு படக்குழுவினரும் எனக்கு உறுதுணையாக இருந்தனர் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கியில் தங்கம் வென்றதை அடிப்படையாக கொண்டு கோல்டு படம் உருவாகி உள்ளது. ரீமா காக்தி இயக்கி உள்ளார். பர்கான் அக்தர் மற்றும் ரித்தேஷ் சித்வானி இணைந்து தயாரித்துள்ளனர். வருகிற ஆகஸ்ட் 15-ம், சுதந்திர தினத்தில் படம் ரிலீஸாகிறது.