ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர் நடிப்பில் ஜனவரி 25-ந்தேதி திரைக்கு வந்த படம் பத்மாவத். சஞ்சய்லீலா பஞ்சாலி இயக்கிய இந்த படத்தில் சர்ச்சைக்குரிய விசயங்கள் இருப்பதாக சொல்லி படத்தை வெளியிட வடமாநிலங்களில் பலத்த எதிர்ப்பு, போராட்டங்கள் வெடித்தன. அதனால் படத்தை திட்டமிட்டபடி வெளியிட முடியாமல் ரிலீஸ் தேதியை மாற்றிக்கொண்டே வந்தனர். பின்னர், நீதிமன்றம் படத்தை வெளியிட அனுமதி அளித்ததை அடுத்து சில வட மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் பத்மாவத் படம் வெளியானது.
மேலும், சர்ச்சைக்குரிய படமாகி விட்டதால் இந்த படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே திரையிட்ட அனைத்து மாநிலங்களிலும் நல்ல வசூல் இருந்து வந்தது. அந்த வகையில், ஆந்திராவைப் பொறுத்தவரை 2 வாரங்களில் ரூ.20 கோடி வசூலித்துள்ள பத்மாவத் படம் தொடர்ந்து வசூலித்துக் கொண்டிருக்கிறது. இந்தியில் அமீர்கான் நடித்து ஆந்திராவில் வெளியான டங்கல் படம் 2 வாரங்களில் ரூ. 21.12 கோடி வசூலித்தது.
தற்போதைய நிலவரப்படி டங்கலை விட பத்மாவத் படத்தின் வசூல் குறைவாக இருந்தபோதும், பத்மாவத் படத்தின் வசூல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அடுத்த வாரத்தில் டங்கல் வசூலை முறியடித்து சாதனை செய்து விடும் என்கிறார்கள்.