பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டின் முன்னாள் ஹீரோ ஜிதேந்திரா. 150-க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். 75 வயதை கடந்துள்ள ஜிதேந்திரா தற்போது தயாரிப்பு துறையிலும் உள்ளார். இந்நிலையில் இவர் மீது உறவுக்கார பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார்.
அதில், தனக்கு 18 வயது இருக்கும்போது ஜிதேந்திராவிற்கு 28 வயது. ஷூட்டிங்கின் போது ஹிம்மாச்சல் அழைத்து சென்று ஓட்டலில் வைத்து என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என இப்போது புகார் கூறியுள்ளார். இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதேசமயம் இதை ஜிதேந்திரா தரப்பு மறுத்துள்ளது. இதுதொடர்பாக அவரது வக்கில் கூறுகையில், இது முற்றிலும் பொய்யான புகார். அந்தமாதிரி எதுவும் நடக்கவில்லை என ஜிதேந்திரா கூறுகிறார். எந்த ஆதாரமும் இல்லாமல் சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது புகார் கூறுவது ஏற்புடையதல்ல என்று கூறியுள்ளார்.