ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாகுபலி படம் மூலம் இந்தியாவையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் ராஜமெளலி. இவரின் தந்தை கேவி.விஜயேந்திர பிரசாத் தான் இப்படத்திற்கு கதை எழுதினார். இதன்மூலம் இவரும் இந்தியா அளவில் பேசப்பட்ட கதாசிரியரானார். சல்மான் பஜ்ரங்கி பைஜான் படத்தின் கதையும் இவருடையது தான். தற்போது, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு கதை எழுதும் வாய்ப்பை பெற்று வருகிறார்.
இந்நிலையில், அடுத்தப்படியாக ஷாரூக்கான் படத்திற்கு விஜயேந்திர பிரசாத் கதை எழுத உள்ளார். இதுதொடர்பாக சமீபத்தில் விஜயேந்திர பிரசாத், ஷாரூக்கானை சந்தித்து கதை கூறியிருக்கிறார். இந்த கதை பழிவாங்கும் கதையில் ஆக்ஷ்ன் நிறைந்த படமாக, ஷாரூக்கானுக்கு ஏற்ற கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. விரைவில் இவர்கள் இணையும் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.