இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
அக்ஷ்ய் குமார் நடிப்பில் இந்தாண்டு மூன்று படங்கள் வெளியாவது உறுதியாகிவிட்டது. இதில் அவர் நடித்துள்ள 2.O மற்றும் பேடுமேன் படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி வருகின்றன. அடுத்தப்படியாக கோல்டு படத்திலும் நடித்து முடித்துவிட்டார். இதன் போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் தொடங்கி உள்ளன.
இதைத்தொடர்ந்து, கேசரி என்ற படத்தில் நடிக்கிறார் அக்ஷ்ய் குமார். 1897-ம் ஆண்டு நடந்த சரகரஹி போரை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இதில் 21 சீக்கிய வீரர்களில் முதன்மையானவராக அக்ஷ்ய் நடிக்கிறார். இவருடன் பரிணிதி சோப்ரா முக்கிய ரோலில் நடிக்கிறார். இப்படத்திற்காக சீக்கியர்களின் முக்கிய தற்காப்பு கலையான வாள்வீச்சு, கம்புச்சண்டை உள்ளிட்ட கட்கா கலையை பயில உள்ளார் அக்ஷ்ய். கேசரி படத்தை அனுராக் சிங் இயக்க, கரண் ஜோகரும், அக்ஷ்ய் குமாரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
அடுத்தாண்டு ஹோலி பண்டிகையில் கேசரி படம் ரிலீஸாகிறது.