ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர், ஆகியோரது நடிப்பில் உருவான பத்மாவத் படம், கடும் எதிர்ப்புகளுக்கு இடையே கடந்த வியாழன் அன்று ரிலீஸானது. படத்திற்கு எழுந்த எதிர்ப்பே பிளஸ்ஸாக மாற வசூலை குவித்து வருகிறது பத்மாவத் படம். இதனால் தீபிகா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் பங்கேற்ற தீபிகாவிடம், பத்மாவத் படத்தில் உங்களை கவர்ந்த காட்சி எது என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், கில்ஜி - ராவல் இடையேயான சண்டை தான் எனக்கு மிகவும் பிடித்தமான காட்சி. இந்த காட்சி படமாக்கப்பட்டபோது நானும் இருந்தேன். இரண்டு பெரிய ஸ்டார்கள் இதுபோன்று சண்டையிட்டது இல்லை. இருவரும் நிஜமாகவே ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு சண்டையிடுவது போன்று இருந்தது என்றார்.
பத்மாவத் படம் ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்துள்ளது. மேலும் வசூல் சிறப்பாக இருப்பதால் படம் பாக்ஸ் ஆபிஸில் இணையும் என்கிறார்கள்.