பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தீபிகா படுகோனே நடித்த பத்மாவத் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. படப்பிடிப்பின் போதே தாக்குதல், தணிக்கை குழுவில் இழுத்தடிப்பு, பல்வேறு அமைப்புகளின் கொலை மிரட்டல், இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் தீபாவின் தலைக்கு பரிசு அறிவித்தல், 5 மாநிலங்களின் கடுமையான எதிர்ப்பு, போராட்டங்கள், தியேட்டர்கள் மீது தாக்குதல் என அனைத்து தடைகளையும் மன உறுதியின் மூலமாகவும், சட்டத்தின் மூலமாகவும் உடைத்தெறிந்து வெளிவருகிறாள் பத்மாவதி.
கொலை மிரட்டல் காரணமாகவும், கடும் விமர்சனங்கள் காரணமாகவும் வீட்டில் முடங்கி கிடந்த தீபிகா படுகோனே இப்போது சுந்திர காற்றை சுவாசிக்கத் தொடங்கி உள்ளார். படம் நாளை வெளிவருவதையொட்டி. படம் எந்த பிரச்சினையும் இல்லாமல் நாடு முழுவதும் ஓடி வெற்றி பெற்று தயாரிப்பாளரும், இயக்குனருமான சஞ்சய் லீலா பன்சாலிக்கு விருதுகளையும், வசூலையும் குவிக்க வேண்டும் என்று நேற்று தீபிகா மும்பை சித்தி விநாயர் கோவிலில் மனமுருக பிரார்த்தனை செய்தார்.
முன்னதாக அவரை கோவில் நிர்வாகிகள் வரவேற்று அழைத்துச் சென்று சாமி கும்பிட வைத்தனர். சுமார் 15 நிமிடங்கள் அவர் சாமி முன்பு மனமுருக வேண்டி நின்றார். பின்னர் அவர் கோவில் நிர்வாகிகளுக்கு நன்றி தெரித்து புறப்பட்டார். தீபிகாவின் வருகையையொட்டி கோவிலைச் சுற்றி நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.