ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே நடித்த, பத்மாவதி திரைப்படத்தில், வரலாற்று நிகழ்வுகள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி, ராஜஸ்தான், ம.பி., மாநிலங்களைச் சேர்ந்த, ராஜபுத்ர சமூகத்தினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
பல மாநிலங்களில் வன்முறை பரவியது. ம.பி., குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில், இந்த படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பின், படத்தின் பெயரை, பத்மாவத் என மாற்றி, சில காட்சிகளை நீக்கி, படத்தை வெளியிட, அனுமதி வழங்கப்பட்டது. இப்படத்துக்கு, சில மாநிலங்களில் விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, திரைப்பட தயாரிப்பாளர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
மனுவை பரிசீலித்த நீதிபதிகள், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், படத்தை திரையிட விதிக்கப்பட்ட தடைக்கு, இடைக்கால தடை விதித்தனர். இதை எதிர்த்து, ம.பி., ராஜஸ்தான் மாநில அரசுகள், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளன. அந்த மனுவில், பத்மாவத் திரைப்படத்தை திரையிட அனுமதிக்கப்பட்ட உத்தரவில் திருத்தம் செய்யும்படி கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை இன்று தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. படத்தை மறு ஆய்வு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று மனுவை தள்ளுபடி செய்தனர். இதனால் பத்மாவத் படம், எந்த தடையுமின்றி இந்தியா முழுக்க ரிலீஸாகிறது.
அதேசமயம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் இப்படத்தை திரையிட தொடர்ந்து எதிர்ப்பு குரல் வந்து கொண்டு இருக்கிறது. சில இடங்களில் தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. இதனால் பத்மாவத் படம் ரிலீஸாகும் தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பு கொடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.