இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகர் அர்ஜூன் கபூர், "சந்தீப் அவுர் பிங்கி பரார்" என்ற படத்தில் நடித்து வந்தார். இவருக்கு ஜோடியாக பரிணிதி சோப்ரா நடிக்கிறார். திபாகர் பானர்ஜி இயக்குகிறார். படத்தில் அர்ஜூன், ஹரியானா போலீஸாகவும், பரிணிதி, கார்பரேட் கம்பெனியில் வேலை பார்ப்பவராகவும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நிறைவுப் பெற்றது.
இதை அர்ஜூன் கபூர், தன் டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார். அதில், பரிணிதி சோப்ராவுடன் நான் நடித்து வந்த எனது 10வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இயக்குநர் திபாகர் பானர்ஜியுடன் பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது என்று கூறியுள்ளார்.
"சந்தீப் அவுர் பிங்கி பரார்" படத்தை யாஸ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஆகஸ்ட் 3-ம் தேதி படம் ரிலீஸாகிறது.