டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பத்மாவத் படம் ரிலீஸானால் தீயில் குதிப்போம் என ராஜஸ்தானில் உள்ள ஆயிரக்கணக்கான பெண்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர் முதன்மை ரோலில் நடிக்க உருவாகி உள்ள படம் பத்மாவத்.
இப்படத்தில் சித்தூர் மகாராணியை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி ராஜபுத்ர அமைப்பை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படத்திற்கு சென்சார் போர்டு அனுமதி அளித்த பின்னரும் படத்தை திரையிட விட மாட்டோம் என பல்வேறு சமூகத்தினர் எதிர்ப்பு குரல் கொடுத்து வருகின்றனர்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடையை சுப்ரீம் கோர்ட் நீக்கியுள்ளது. இதனால் பத்மாவத் படத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. குஜராத் மற்றும் ராஜஸ்தானில் பல்வேறு இடங்களில் போராட்டங்களும், தீ வைப்பு சம்பவங்களும் நடந்து வருகின்றன.
தீயில் குதிப்போம்
இந்நிலையில், ராஜஸ்தானில் போராட்டம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. பத்மாவத் படத்தை ரிலீஸ் செய்தால், தங்கள் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்வதாக பெண்கள், கையில் வாளுடன் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதேபோன்று சித்தூர்கர் பகுதியில் தீயில் குதித்து தற்கொலை செய்து கொள்வதாக 1908 பெண்கள் பதிவு செய்து வைத்துள்ளனர். சித்தூர்கர் கோட்டையை நோக்கி கண்டன பேரணியும் நடத்தப்பட்டு வருகிறது.
தடை வேண்டி மேல்முறையீடு
பத்மாவத் படத்தை ரிலீஸ் செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் இந்த முடிவை மாற்றிக் கொண்டு, படத்தின் ரிலீசுக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டு ராஜஸ்தான், மத்திய பிரதேச உள்ளிட்ட மாநில அரசுகளின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேற்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நாளை (ஜன.,23) விசாரணைக்கு வர உள்ளது.