டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சித்தூர் ராணி பத்மாவதி, முகலாய மன்னன் அலாவுதீன் கில்ஜியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள பத்மாவத் திரைப்படத்துக்கு தணிக்கை குழு யுஏ சான்றிதழுடன் திரையிட அனுமதி வழங்கி உள்ளது. வருகிற 26ந் தேதி படம் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் படத்துக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.
பல அமைப்புகள் படத்தை திரையிட விடமாட்டோம் என்று அறிவித்துள்ளது. ராஜஸ்தான், குஜராத் மாநில அரசுகள் படத்தை எங்கள் மாநிலத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில் இதுவரை படத்துக்கு எதிர்ப்பு காட்டாமல் இருந்த ஹரியானா மாநிலமும் படத்தை எங்கள் மாநிலத்தில் திரையிட அனுமதியில்லை என்று அறிவித்திருக்கிறது.
ஹரியானா மாநில அமைச்சர்களின் அவரசக்கூட்டம் மாநில முதல்வர் லால் கட்டார் தலைமையில் நேற்று நடந்தது. நாட்டின் முக்கிய பிரச்னைகளுடன் பத்வாத் படம் பற்றியும் பேசப்பட்டது. பேச்சின் முடிவில் படத்தை ஹரியானா மாநிலத்தில் திரையிட அனுமதிக்ககூடாது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தின் முடிவுக்கு பிறகு இதனை அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் நிருபர்களிடம் தெரிவித்தார்.