இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத். தமிழில், தசாவதாரம் படத்தில் நடித்துள்ளார். ஒஸ்தி படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ளார். மல்லிகா தனது காதலர் சிரிலுடன் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் லிவ்விங் டு கெதராக வாழ்ந்து வருகிறார். இந்திய மதிப்பின் படி மாதம் 4 லட்சத்து 60 ஆயிரம் வாடகை செலுத்தி அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார்.
இந்த நிலையில் ஒரு நாள் மல்லிகா வீட்டுக்குள் புகுந்த சில மர்ம நபர்கள், காதலர் சிரிலை தாக்கி விட்டுச் சென்றனர். இதனால் வீட்டு உரிமையாளர் உரிய பாதுகாப்பு தர தவறிவிட்டார் என்று கூறி வாடகை செலுத்தாமல் இருந்தார் மல்லிகா. வாடகை பாக்கி ரூ.64 லட்சமானது. இதனால் வீட்டு உரிமையாளர் மல்லிகா மீது கோர்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. மல்லிகா ஷெராவத், கடும் நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், அதனால் வாடகை செலுத்த முடியவில்லை என்றும் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். வீட்டு உரிமையாளரின் வழக்கறிஞர், மல்லிகா ஷெராவத் கடந்த ஆண்டு நடித்த படங்களின் பட்டியலையும், அதற்கு அவர் வாங்கி சம்பளத்தையும் கோர்ட்டில் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து வாடகை பாக்கியை செலுத்தாத மல்லிகா ஷெராவத்தை வீட்டில் இருந்து உடனடியாக வெளியேற்றும்படி நீதிமன்றம், காவல்துறைக்கு உத்தரவிட்டது.