ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மராட்டிய மாநிலத்தின் அரசியல் ஹீரோ பால் தாக்கரே. மராட்டிய மக்களின் உரிமைக்காக போராடிய அவர் சிவசேனா கட்சியை தொடங்கி மராட்டிய மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தினார். தனது ஆதரவில்லாமல் எந்த கட்சியும் ஆட்சி நடத்த முடியாது என்கிற நிலையை உருவாக்கி வைத்தார். கடந்த 2012ம் ஆண்டு மரணம் அடைந்தார். தற்போது அவரது வாழ்க்கை சினிமாவாகிறது.
இதனை சிவசேனா கட்சி எம்.பி சஞ்சய் ராவத் தயாரிக்கிறார். இதில் பால்தாக்கரேவாக நடிக்க பாலிவுட் நடிகர் நசுருதீன் சித்திக்குடன் பேச்சு நடந்து வருகிறது. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. முக்கியமாக பால்தாக்கரேவின் பால்ய பருவம், இளமை பருவம் ஆகியவற்றில் நடிக்க அதே முகத்தோற்றம் கொண்ட நடிகர்களை தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து தயாரிப்பாளர் சஞ்சய் ராவத் கூறியிருப்பதாவது: எங்கள் தலைவர் பால்தாக்கரேவின் வாழ்க்கையை நான் எனது சொந்த செலவில் தயாரிக்கிறேன். அவரது வீரம் செரிந்த போராட்ட வாழ்க்கையை வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறேன். வருகிற 21ந் தேதி படத்தின் துவக்க விழா நடக்கிறது. பால்தாக்கரேவின் நண்பரும் பாலிவுட் நடிகருமான அமிதாப்பச்சன் கலந்து கொள்கிறார். படப்பிடிப்புகள் ஜனவரியில் தொடங்குகிறது. 90 சதவிகித படப்பிடிப்புகள் மும்பையிலேயே நடக்கும் என்றார் சஞ்சய் ராவத்.