கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
பத்மாவதி படத்திற்கு எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில் ராஜஸ்தானில் உள்ள நகர்ஹர்கா கோட்டையில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பாலிவுட்டின் பிரபல இயக்குனர், சஞ்சய் லீலா பன்சாலி, பத்மாவதி என்ற ஹிந்தி படத்தை இயக்கி உள்ளார். ராஜஸ்தானை ஆட்சி செய்த, ராஜபுத்ர சமூகத்தைச் சேர்ந்த, ராணி பத்மினியின் வாழ்க்கையை மையமாக வைத்து, இந்த படம் தயாராகிறது. இதில் ராணி பத்மினியாக, தீபிகா படுகோனே நடித்துள்ளார். அவரது கணவர், ரதன் சிங்காக, ஷாகித் கபூரும், அலாவுதீன் கில்ஜியாக, ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் ராஜபுத்ர சமூகத்தினரை அவமதிக்கும் வகையிலான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி, வட மாநிலங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. படத்தின் இயக்குனர், நடிகை தீபிகா படுகோனே ஆகியோருக்கு, மிரட்டல்கள் விடுக்கப்பட்டு உள்ளன. இதனால், அடுத்த மாதம் வெளியாக இருந்த இந்த படம், 2018க்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நகர்ஹர்கா கோட்டையில் அடையாள தெரியாத நபர் ஒரு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்ட இடத்தின் அருகே பத்மாவதி படத்திற்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் பத்மாவதி படத்தை எதிர்க்கிறோம், நாங்கள் உருவ பொம்மையெல்லாம் எரிக்க மாட்டோடு, கொலை செய்துவிடுவோம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு, பத்மாவதி படம் ரிலீஸாவதில் கடும் சிக்கல் உருவாகி இருக்கிறது.