'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'தீபிகா தலைக்கு, 10 கோடி ரூபாய் தருவோம். தீபிகாவை உயிருடன் எரித்தால், ஒரு கோடி ரூபாய் தருவோம். தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்' என, தனக்கு எதிராக, பகிரங்கமாக, தினமும் மிரட்டல் விடுக்கப்படுவதை பார்த்து, உண்மையிலேயே மிரண்டு போயிருக்கிறார், தீபிகா.
சர்ச்சைக்குரிய பத்மாவதி படத்தில், அவர் நடித்தது தான், இந்த மிரட்டலுக்கு காரணம். ராஜபுத்ர சமூகத்தைச் சேர்ந்த, சித்துார் கோட்டை ராணி, பத்மினியாக, பத்மாவதி படத்தில் நடித்துள்ளார், தீபிகா. இதில், ராணி பத்மினியை தரக்குறைவாக சித்தரிக்கும் வகையிலான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி, வட மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. துவக்கத்தில், இதை பொருட்படுத்தாமல் இருந்த தீபிகா, இப்போது, பீதியில் உறைந்து போயுள்ளார்.
'நாங்கள் குல தெய்வமாக வழிபடும் பத்மினியை பற்றி தரக்குறைவாக விமர்சித்தால், சும்மா விட்டு விடுவோமா' என, ராஜபுத்ர சமூகத்தினர் விடும் மிரட்டல்களால், வீட்டை விட்டு வெளியேற முடியாதபடி முடங்கி கிடக்கிறார், தீபிகா.