அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் |
'தீபிகா தலைக்கு, 10 கோடி ரூபாய் தருவோம். தீபிகாவை உயிருடன் எரித்தால், ஒரு கோடி ரூபாய் தருவோம். தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்' என, தனக்கு எதிராக, பகிரங்கமாக, தினமும் மிரட்டல் விடுக்கப்படுவதை பார்த்து, உண்மையிலேயே மிரண்டு போயிருக்கிறார், தீபிகா.
சர்ச்சைக்குரிய பத்மாவதி படத்தில், அவர் நடித்தது தான், இந்த மிரட்டலுக்கு காரணம். ராஜபுத்ர சமூகத்தைச் சேர்ந்த, சித்துார் கோட்டை ராணி, பத்மினியாக, பத்மாவதி படத்தில் நடித்துள்ளார், தீபிகா. இதில், ராணி பத்மினியை தரக்குறைவாக சித்தரிக்கும் வகையிலான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி, வட மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. துவக்கத்தில், இதை பொருட்படுத்தாமல் இருந்த தீபிகா, இப்போது, பீதியில் உறைந்து போயுள்ளார்.
'நாங்கள் குல தெய்வமாக வழிபடும் பத்மினியை பற்றி தரக்குறைவாக விமர்சித்தால், சும்மா விட்டு விடுவோமா' என, ராஜபுத்ர சமூகத்தினர் விடும் மிரட்டல்களால், வீட்டை விட்டு வெளியேற முடியாதபடி முடங்கி கிடக்கிறார், தீபிகா.