தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர் நடித்துள்ள பத்மாவதி படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் ரிலீஸ், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தீபிகா, சஞ்சய் உள்ளிட்டவர்களுக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுப்பற்றி கருத்து தெரிவிக்க ரன்வீர் சிங் மறுத்து வருகிறார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரன்வீரிடம் பத்மாவதி படம் எதிர்ப்பு பற்றி கேட்டபோது, அவர் கூறியதாவது... நான் ஏற்கனவே சொன்னது போன்று என் படம் மற்றும் இயக்குநர் சஞ்சய் ஆகியோருக்கு 200 சதவீதம் துணை நிற்பேன். இந்த சமயம் எது பேசினாலும் அது உணர்ச்சிகரமாக மாறிவிடுகிறது. ஆகையால் யாரும் எதுவும் பேச வேண்டாம் என்று நினைக்கிறேன். எந்த செய்தியாக இருந்தாலும் அது படக்குழு சார்பில் தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார் என்றார்.