தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை ஐஸ்வர்யா ராய், நேற்று உதடு பிளவுப்பட்ட 100 குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கு உதவும் வகையில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு தனது மகள் ஆராத்யாவுடன் சென்றார். ஐஸ்வர்யா வருவதை அறிந்து அங்கு ஏராளமான புகைப்பட கலைஞர்களும், பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டனர். புகைப்பட கலைஞர்கள் ஐஸ்வர்யா மற்றும் அவரது மகளை போட்டோ எடுக்க அதிக ஆர்வம் காட்டினார். இதனால் அவர்கள் கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா, அவர்களை வேண்டாம், இது படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி அல்ல, குழந்தைகள் நிகழ்ச்சி, அவர்கள் பயப்படுகிறார்கள் என்று எவ்வளவோ சொல்லி பார்த்தார். ஆனால் புகைப்படக்காரர்கள் அதை கேட்கவில்லை. இதனால் ஒருக்கட்டத்தில் இவர்களின் செயலை பார்த்து கண்கலங்கி விட்டார். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.