இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி உள்ள படம் பத்மாவதி. இது முகலாய மன்னர் அலாவுதீன் கில்ஜி, மற்றும் சித்தூர் மகாராணி பத்மாவதி ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட வரலாற்றுப் படம். இந்தப் படத்தில் பத்மாவதி பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி ராஜபுத்திர சமூகத்தினர் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தீபிகா தலையை வெட்டுவோம், உயிரோடு கொளுத்துவோம் என்று மிரட்டல் விடுத்து வருகின்றனர். மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இப்படம் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுப்பற்றி கருத்து தெரிவித்துள்ள இப்படத்தில் நடித்திருக்கும் சாகித் கபூர் கூறியதாவது... இது மிகவும் வெட்ககேடான செயல். எந்த ஒரு பிரச்னைக்கும் வன்முறை தீர்வாகாது. இது தேவையற்ற ஒன்று. எந்த அமைப்பை பற்றியும் நான் கருத்து கூற விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.